மாசி மகம் பெளர்ணமி பூஜை, விரத வழிபாடு செய்வதன் சிறப்புகள்

Posted By: Admin, 30 Nov -0001.

Masi Magam Pournami : மாசி மாதத்தில் வரக்கூடிய மகம் நட்சத்திரத்துடன் கூடிய பெளர்ணமி தினம் மிகவும் விசேஷமாக பார்க்கப்படுகிறது. மாசி மகத்தன்று விரதமிருந்து இறைவனை நம்பிக்கையோடு வழிபட்டு வந்தால் இந்த வாழும் வரை ஆரோக்கியத்தோடு, உலகையே ஆளக்கூடிய ஆசி கிட்டும் என்பது ஐதீகம். அன்றைய தினம் விரதமிருந்து இறை வழிபாடு செய்தால் சிவ தீட்சை பெற்றிட முடியும். மகம் நட்சத்திரம் நவகிரகங்களில் நிழல் கிரகம் என அழைக்கப்படும் கேது பகவான் அதிபதியாக இருக்கக்கூடியவர். இவர் ஞானத்தையும், மோட்சத்தையும் அருளக்கூடியவர்.